Sunday, May 17, 2009

மறக்கமுடியவில்லை...

இன்பம் மிக்க இந்த பூமியில் பிறந்து நமக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் யாவும் நினைவில் திரைப்படம் போல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பரபரப்பான இந்த உலகத்தில் இந்தப் படத்தை பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சற்றே தனிமையில் அமர்ந்து சிந்தனைக் குதிரையை தட்டிவிட்டோமானால் அன்றோ நம் இனிய நினைவுகள் நம் மனதை குளிரூட்டவரும். ஆஹா! அந்த இனிய நினைவுகளால் எத்தனை நாட்கள் என் கவலைகளை மறந்து களித்திருக்கிறேன்.

வானத்து வெண்ணிலா எங்கு சென்றாலும் உடன் நடந்து வருவது, காக்கா கடி போட்டு மிட்டாய் திண்பது, பனை ஓலைக் காத்தாடி, பனங்கா வண்டி, டயர் வண்டி, கயிற்றால் சுற்றி வளைத்த சிக்கு புக்கு இரயில் வண்டி, தெருவில் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, திருவிழாக் கால ஆட்டங்கள் இப்படி எத்தனை எத்தனை!

இன்றும் நினைத்தால் இனிக்கிறதே, ஐயகோ...மீண்டும் அந்த வாழ்க்கை திரும்பி வராதா? வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் விலைக்கு வாங்க முடிகிறதே, ஆனால் மீண்டும் நம்மால் அந்த சிறுவயது வாழ்க்கையை வாங்க முடியுமா? முடியாதுதான் ஆனால் நிச்சயம் அதை நினைத்துக் குதூகலம் அடையமுடியும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் நம் குழந்தைகள் அவற்றை அனுபவிக்க முடியாமல் போகிறதே என்று மனதில் ஒரு ஓரத்தில் சிறு கவலை இருந்துகொண்டுதான் இருக்கும். என்ன செய்வது, காலம் மாறிப் போச்சு, உலக மயமாக்குதலும், பன்னாட்டு வர்த்தகமும், மேல் நாட்டுக் கலாச்சாரமும் நம்மை ஏராளமாக மாற்றி விட்டது. சரி, போனதெல்லாம் போகட்டும், வாருங்கள் நம் கடந்த காலத்தை சற்று அசை போடுவோம். என் வாழ்வில் அனுபவித்ததை நான் சொல்கிறேன், அதை ஒட்டி உங்கள் வாழ்வில் நடந்ததை நீங்கள் நினைவு கூர்ந்து இரசியுங்கள், முடிந்தால் மற்றவரும் அனுபவிக்குமாறு ஒரு பதிவைத் தொடங்கி எழுதுங்கள்.

No comments:

Post a Comment

வருகை புரிந்தோர் வரைபடம்...

Click to zoom in on my visitor map!
Create your free world visitor maps