Sunday, June 28, 2009

பனை ஓலைக் காத்தாடி

நாம் ஏற்கனவே பட்டம் என்னும் காத்தாடியைப் பற்றி பகிர்ந்துகொண்டோம் நம் நினைவுகளை. இந்தக் காத்தாடியை அதோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம், இது காத்தாடி (fan) வகையைச் சேர்ந்தது.

சிறுவயதில் வீட்டில் விளையாடப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, நைசாக தப்பித்து சோளக்காட்டுக்குச் செல்வோம். அங்கு சோளத்தட்டை காட்டின் சொந்தக்காரருக்கு தெரியாமல் உடைத்து எடுத்து வந்து, அதோடு பனை ஓலையை கூட்டல் குறி வடிவத்தில் செய்து, நல்ல பெரிய முள்ளால் அந்தப் பனை ஓலையில் நடுவில் குத்தி சோளத்தட்டின் ஒரு முனையில் சொருகிவிடுவோம். அப்புறம் என்ன காத்தாடு ரெடி! அதை அப்படியே காற்று வரும் திசையில் காட்டினால் போதும் அருமையாக அந்தப் பனை ஓலை சுத்த ஆரம்பிக்கும். அப்புறம் என்ன திரும்பவும் போட்டிதான்.

யாருடைய ஓலை மிகவும் வேகமாக சுத்திகிறதோ அவர் முகத்தில் தெரியும் வெற்றிக் களிப்பு அப்பப்பா இன்று நாம் வேகமாக ஓட்டும் விலையுயர்ந்த ரிமோட் காரில் கூடத் தெரியாது. காரணம் டெக்னாலஜி, நம்முடைய சொந்த டெக்னாலஜி அல்லவா அது!

அப்படியென்ன பெரிய டெக்னாலஜி என நீங்கள் கேட்கலாம், ஆனால் நாம் வெட்டும் பனை ஓலை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும், அதோடு முள் குத்தும் விஷயமும் மிகவும் முக்கியம். முள்ளை ஒடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சிறிது கவனம் தவறினாலும் விரலை பெயர்த்து விடும். இது எல்லாம் சரியாக இருந்தால் தான் அந்தக் காத்தாடி பறக்கும் இல்லையேல் அம்பேல்தான், முகத்தை தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

காத்தடிக்கலனாலும் பரவாயில்ல, அந்தக் காத்தாடிய அப்படியே கையில பிடிச்சுகிட்டு ஓடினா போதும், சும்மா கரகரனு சூப்பரா சுத்தும். இதெல்லாம் நல்ல என்ஜாய் பண்ணிட்டு புழுதி படிஞ்சி வீட்டுக்குப் போனா நல்லா மொத்துவாங்க, இருந்தாலும் அடுத்த வாரம் லீவுலயும் அதே சோளக் காட்டுக்கு கால் தானா போகும்.

நம்மளோட மூளைக்கும் நல்ல வேலை, அதே நேரத்துல உடம்புக்கும் நல்ல எக்ஸர்சைஸ்...

நாம பேட்டண்ட் வாங்காம விட்டதால இன்னைக்கு இதையே சைனாக்காரன் பிளாஸ்டிக்ல செஞ்சி 20 ரூபாய், 30 ரூபாய்னு நம்ம கிட்டயே விக்கறான் நாமளும் நம்ம குழந்தைங்களுக்கு வாங்கிக் குடுக்குறோம். ரொம்ப ஹை டெக் வேர்ல்டா போயிடுச்சு, ஆனா நம்ம வாண்டுகளோட மூளை வளர்ச்சி அண்ட் திங்கிங் பவர்?!!!!

Monday, June 1, 2009

பம்பாய் மிட்டாய்...

இன்னிக்கு வகை வகையாக சாக்லெட்டுகள், இனிப்புகள் ஆயிரக்கணக்கில கிடைக்குது, ஆனாலும் அந்த நாளில சாப்பிட்ட பம்பாய் மிட்டாயைப் போல வருமா!

ஒரு குச்சியின் உச்சியில சலங்கையும், ஜால்ராவும் கையில வைத்திருக்கும் பொம்மையை வைத்துக் கொண்டு ச்சலக்கு ச்சலக்கு ஜல் ஜல் என்று சத்தம் செய்து கொண்டு வருவான் பம்பாய் மிட்டாய்க்காரன். அப்படி என்ன அதுல விஷேசம்! சிவப்புக் கலரும், வெள்ளைக் கலரும் வரி வரியா இருக்குற மிட்டாய் அது. ஒரு குச்சியோட உச்சியில பொம்மை இருக்கும், அந்த பொம்மையோட கையில ஜால்ராவ கட்டி அதுல இருந்து தொங்கற கயித்த பிடிச்சி ஜல் ஜல்னு அடிச்சிகிட்டே வருவான். அந்த பொம்மைக்கு கீழ ஒரு பாலிதீன் பை சுத்தி இருக்கும் அதுக்குள்ளதான் நம்ம பம்பாய் மிட்டாய சுத்தி வைச்சிருப்பான் மிட்டாய்க்காரன்.

ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தா நீளமா வரும், நல்ல சுவையாவும் இருக்கும். இதுல விஷேசமே நீங்க குடுக்கற காசுக்கு தகுந்த மாதிரி நீங்க விரும்பற வடிவத்துல கெடைக்கும் இந்த மிட்டாய். வாட்ச் மாதிரி வேணுமா, காந்தி கடிகாரம் மாதிரி வேணுமா, மோதிரம் வேணுமா, இல்ல வளையல் மாதிரி வேணுமா என்ன மாதிரி வேணும்னு சொல்லுங்க அந்த மாதிரி கெடைக்கும் பம்பாய் மிட்டாய்.

அதை சாப்பிடறமோ இல்லையோ, வாங்கி கையிலயும், கழுத்துலயும் கட்டிகிட்டு மத்த பசங்க முன்னால கொஞ்சம் ஸீனப் போட்டுட்டு சாப்பிடற சந்தோஷம் இருக்கே அது எந்த கேட்பரீஸ்லயும் வராது.

பம்பாய் மிட்டாய்க்காரன் ரெகுலரா எல்லாம் வரமாட்டான், வாரத்துக்கு ஒருதடவைதான் வருவான். அப்படி வந்தான் தெருவுல இருக்கற அத்தனை வாண்டுகளும் சரி, பெரிய பசங்களும் சரி ஒரு பெரிய கூட்டமே அவனை சுத்தி நிற்கும்.

ஹீம், இன்னிக்கு அதெல்லாம் எங்க கெடைக்குது, அப்படியே கெடைச்சாலும் நம்ம பசங்கள வாங்கி சாப்பிட விடுவமா நாம! இதுதான் நம்ம அறிவியலின் வளர்ச்சி, கண்ண வித்து ஓவியம் வாங்குற மாதிரி...

கொசுறு: பம்பாய் மிட்டாய்ன உடனே பம்பாய்ல இருந்து இறக்குமதி பண்ணினது நெனைச்சுக்காதீங்க, நம்ம ஊரு மாரியம்மன் கோவில் பக்கத்துலதான் மிட்டாய காய்ச்சுவான்...

வருகை புரிந்தோர் வரைபடம்...

Click to zoom in on my visitor map!
Create your free world visitor maps